Sunday 19th of May 2024 06:40:31 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்று உறுதியான மாரவில பெண்ணுடன் தொடர்புடைய 40 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

கொரோனா தொற்று உறுதியான மாரவில பெண்ணுடன் தொடர்புடைய 40 பேர் சுய தனிமைப்படுத்தலில்!


கொரோனா தொற்று உறுதியான மாரவில பெண்ணுடன் தொடர்புடைய 40 பேர் இனம்காணப்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிலாபம், மாரவில பிரதேசத்தில் 10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகரான பெண்ணுடன் நெருங்கிப் பழகியதாக கூறப்படும் தரப்பினரே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் தற்போதைய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மத்திய நிலையமாகும். பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே குறித்த மத்திய நிலையத்தில் நபர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.

எனினும், அங்கிருந்த ஒருவர் எவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானார் என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE